NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு
    ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு

    ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு

    எழுதியவர் Nivetha P
    Sep 28, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்'ல் அமைந்துள்ளது பாலப்பூர் விநாயகர் கோயில்.

    இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம்.

    10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்பட்ட லட்டு விநாயகர் முன் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சுத்தமான நெய், உலர் பழங்கள் கொண்டு அதிக அளவிலான எடையில் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.

    அதன் பின்னர் அந்த லட்டு மீது தங்க முலாம் பூசப்பட்டு வெள்ளி கிண்ணத்தில் வைத்து பூஜைகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    அதன் பின்னர் இந்த லட்டு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் ஏலம் விடப்படுகிறது.

    கடந்த 30 ஆண்டுகளாக இந்த முறை பழக்கத்தில் இருந்து வருகிறது.

    ஏலம் 

    கடந்தாண்டு ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு 

    அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தயாரிக்கப்பட்ட இந்த 21-கிலோ எடைக்கொண்ட பிரம்மாண்ட லட்டு இன்று(செப்.,28) ஏலம் விடப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதன் ஆரம்பவிலை ரூ.1,116 என்று கோயில் நிர்வாகம் நிர்ணயித்த நிலையில், உள்ளூர்-வெளியூரினை சேர்ந்த 36 நபர்கள் ஏலம் கேட்டுள்ளனர்.

    இதன் முடிவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தினை சேர்ந்த தசரி தயானந்த் ரெட்டி என்பவர் இந்த லட்டுவினை ரூ.27 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

    கடந்தாண்டு ரூ.24.60 லட்சத்துக்கு இந்த லட்டு ஏலம் போனது.

    அதுவே இதுவரையிலான அதிகத்தொகை என்றும் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்தாண்டு அதனை முறியடித்தது இந்த ஏலத்தொகை.

    இதனிடையே கடந்த 1994ம் ஆண்டு முதன்முறையாக இந்த லட்டுவினை ரூ.450க்கு விவசாயி ஒருவர் ஏலம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    விநாயகர் சதுர்த்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து ஆந்திரா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது இந்தியா
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  உயர்நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025