NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை

    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 29, 2023
    03:46 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களும் இதற்கு ஒரு காரணம்.

    தற்போது இந்தியாவில் 30 பில்லியன் டாலர் மதிப்பில் 90,000 ஸ்டார்ட்-அப்களும், 107 யுனிகார்ன் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

    ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான வழிமுறையை எளிமையாக்கியிருக்கிறது இந்திய அரசு. சரி, நாம் ஒரு ஸ்டார்ட்-அப்பை நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், அதனை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

    முதலில் உங்கள் நிறுவனத்தை அரசின் நிறுவனப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தை Limited Liability Partnership நிறுவனமாவோ அல்லது தனியார் நிறுவனமாகவோ அல்லது கூட்டு நிறுவனமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    ஸ்டார்ட்-அப்

    ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை: 

    உங்கள் நிறுவனத்தை பதிவு செய்த பின், இந்திய அரசின் ஸ்டார்ட்-அப் இணையதளத்தில் அதனைப் பதிவு செய்ய வேண்டும்.

    அதற்கு startupindia.gov.in என்ற பக்கத்திற்கு சென்று Register ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் நிறுவனத்தின் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன் பின்னர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான அந்த இணையதளப் பக்கத்திலேயே DPIIT அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த அங்கீகாரத்தைப் பெறுவதன் மூலம், முதலீடுகள் பெறுவதும், வரிவிலக்கு பெறுவது உள்ளிட்ட நன்மைகளை அடைய முடியும்.

    அவ்வளவு தான், இனி மேற்கூறிய நடவடிக்கைகளை முடிவடைந்து உங்களது பதிவு மற்றும் அங்கீகாரச் சான்றிதழ்களுக்கு காத்திருக்க வேண்டியது தான்.

    இந்த மொத்த வழிமுறைக்கும் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை முன்னரே சரிபார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    இந்தியா

    பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி  இந்தியா
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை! சைபர் கிரைம்
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றம்
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்! சைபர் கிரைம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025