NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 
    மத்திய அரசு இதற்கான பதிலை வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது.

    ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பான மேல்முறையீடுகளின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    ஒரே பாலின தம்பதிகளுக்கு திருமண உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு சமம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

    இதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் தான் இயற்ற வேண்டும் என்று கூறினார்.

    details

    அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சமூக பலன்கள் எப்படி வழங்கப்படும்: உச்ச நீதிமன்றம் 

    அவர் கூறியதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். "இதை நாடாளுமன்றம் தான் இயற்ற வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். சரி, இப்போது என்ன செய்வது? 'சேர்ந்து வாழும்' இந்த திருமணமாகாத உறவுகளுக்கு அரசாங்கம் என்ன செய்யும்? அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சமூக பலன்கள் எப்படி வழங்கப்படும்? அத்தகைய உறவுகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது எப்படி?" என்று கேட்டார்.

    மேலும், அத்தகைய தம்பதியருக்கு கூட்டு வங்கிக் கணக்குகளைத் திறப்பது, காப்பீட்டுக் கொள்கைகளில் பங்குதாரரை சேர்ப்பது போன்ற அடிப்படை சமூக உரிமைகள் வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

    மத்திய அரசு இதற்கான பதிலை வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்
    மத்திய அரசு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு  பெங்களூர்
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  சீனா

    உச்ச நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி இந்தியா
    மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் இந்தியா
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    மத்திய அரசு

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025