NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம் 
    நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 20, 2023
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    கிட்டத்தட்ட 10 நாட்களாக உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

    சிக்கிய தொழிலாளர்களை அணுகுவதற்கு மூன்று பக்கங்களிலிருந்தும் துளையிடப்பட இருக்கிறது என்றும், இந்த திட்டங்களை ஐந்து தனித்தனி ஏஜென்சிகள் கையாள இருக்கிறது என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலர் அனுராக் ஜெயின் கூறியுள்ளார்.

    நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC), சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம்(SJVNL), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய ஐந்து ஏஜென்சிகள் இந்த திட்டங்களை செயற்படுத்த இருக்கின்றன.

    டவ்க்கில்கஜி

    ஐந்து தனித்தனி ஏஜென்சிகள் கையாள இருக்கும் 5 திட்டங்கள் 

    1.சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடப்பட இருக்கிறது. SJVNL இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

    2.தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு அவசரகால வெளியேற்ற பாதையை ஒரே நாளில் எல்லைச் சாலைகள் அமைப்பு கட்டி முடித்திருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான மற்றொரு செங்குத்து குழாய் அமைக்கும் பணியை ரயில் விகாஸ் நிகாம் தொடங்கியுள்ளது.

    3.ஆழமாக துளையிட தெரிந்த நிபுணர்களை கொண்ட ONGC, மற்றொரு முனையிலிருந்து செங்குத்தாக துளையிடும் பணியைத் தொடங்கியுள்ளது.

    4.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பு, பிரதான சில்க்யாரா வாயிலில் இருந்து தொடர்ந்து துளையிட உள்ளது.

    5.டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், மைக்ரோ துளையிடலில் வேலை செய்யும், இதற்காக கனரக இயந்திரங்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    Autombile Safety Tips : கார் விபத்தில் ஏர்பேக்கினால் ஏற்படும் காயத்தைத் தவிர்ப்பது எப்படி? கார்
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் கர்நாடகா
    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் டெல்லி
    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025