NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

    குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 15, 2025
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    குழந்தை கடத்தல் வழக்கை மோசமாக கையாண்டதாக உத்தரபிரதேச அரசு மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) கடுமையாக விமர்சித்ததுடன், நாடு தழுவிய அளவில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.

    உத்தரபிரதேசத்தில் ஒரு தம்பதிக்கு ₹4 லட்சத்திற்கு கடத்தப்பட்ட குழந்தை விற்கப்பட்டது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

    இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த அதே வேளையில், அதிகாரிகளின் கருணையற்ற அணுகுமுறையைக் கண்டித்த அமர்வு, நீங்கள் ஒரு மகனை விரும்பினாலும், கடத்தப்பட்ட குழந்தையை பெற முடியாது என்று கூறியது.

    சமூக அச்சுறுத்தல்

    குற்றம் சாட்டப்பட்டவர் சமூக அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கண்டிப்பு

    குழந்தை திருடப்பட்டது என்பதை அறிந்த குற்றம் சாட்டப்பட்டவர், கடுமையான சமூக அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

    ஜாமீனில் போதுமான நிபந்தனைகளை விதிக்கத் தவறியதற்காக உயர் நீதிமன்றத்தையும் இது குறை கூறியது, இது பல குற்றவாளிகள் தலைமறைவாக வழிவகுத்தது. குறைந்தபட்சம் செய்யக்கூடியது வாராந்திர போலீஸ் அறிக்கையை உறுதி செய்வதாகும் என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

    குழந்தை கடத்தல் வழக்குகளை மிகவும் திறம்பட கையாள, இதுபோன்ற அனைத்து விசாரணைகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், நிலுவையில் உள்ள விசாரணை தரவுகளைச் சேகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் நடவடிக்கைகளை விரைவுபடுத்த பொருத்தமான வழிமுறைகளை வழங்க இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.

    உரிமம்

    மருத்துவமனைகளின் உரிமம்

    ஒரு பெரிய கொள்கை மாற்றத்தில், பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், அதற்கு பொறுப்பான மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஒரு மருத்துவமனையில் இருந்து ஒரு குழந்தை கடத்தப்பட்டால், முதல் படி அதன் உரிமத்தை இடைநிறுத்துவது என்று பெஞ்ச் வலியுறுத்தியது.

    மேலும், இதில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று எச்சரித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    குழந்தைகள்
    மருத்துவமனை
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    நீதித்துறை சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக முடிவெடுப்பது அல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தியா
    அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் இந்தியா
    LMV உரிமம் வைத்திருப்பவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம் வாகனம்
    ஜெட் ஏர்வேஸின் உரிமையை ஜேகேசிக்கு மாற்றியது ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு  ஜெட் ஏர்வேஸ்

    குழந்தைகள்

    உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ?  இந்தியா
    பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின்  உடல் உறுப்புகள் தானம் குஜராத்
    அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை  ஆரோக்கியம்
    இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ? இந்தியா

    மருத்துவமனை

    உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரத போராட்டத்தை அதிஷி கைவிட்டதாக AAP அறிவிப்பு டெல்லி
    பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி பாஜக
    இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் தமிழக அரசு
    ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி திமுக

    இந்தியா

    டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக் பெங்களூர்
    அமெரிக்காவின் 26% பரஸ்பர வரி இந்தியாவிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? அமெரிக்கா
    இந்திய பிரதமர் மோடி வங்கதேசத்தின் முகமது யூனுஸை சந்தித்தார் பிரதமர் மோடி
    பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான 'மித்ர விபூஷண' வழங்கி கௌரவித்தது இலங்கை பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025