NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
    இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா

    எழுதியவர் Nivetha P
    Sep 14, 2023
    01:52 pm
    இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
    நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தி மொழி - அமித்ஷா

    இந்தியா அரசியலமைப்பு சபையானது, இந்தி மொழியினை, 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அலுவல் மொழியாக்கியது. அந்த நாளினை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 14ம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கொண்டாடப்படும் இந்தி தினத்தினை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "'இந்தி திவாஸ்' நாளினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நாடாக இருந்து வந்தாலும், ஜனநாயக மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது" என்று கூறினார்.

    2/2

    இந்தி தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவு 

    அதனை தொடர்ந்து அவர், "பல மொழிகளுக்கு இடையே, இந்தி மொழி ஒற்றுமையினை ஏற்படுத்தும் மொழியாகவும் இருந்து வருகிறது" என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "சுதந்திர போராட்டம் நடந்த நாளிலிருந்து இன்று வரை, நமது நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியினை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதற்கான அகில இந்திய மாநாடு ஒன்று இந்தாண்டு புனேவில் நடக்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தி தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "நல்லெண்ணத்தின் இழை மற்றும் தேசிய ஒற்றுமையினை இந்தி மொழி வலுப்பெற செய்ய எனது வாழ்த்துக்கள்" என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமித்ஷா
    இந்தியா
    பிரதமர் மோடி

    அமித்ஷா

    சனாதன விவகாரம் - உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன? சனாதன தர்மம்
    'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில்  பாஜக
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை

    இந்தியா

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு  நாடாளுமன்றம்
    இந்தியாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்டர்கள் கிரிக்கெட்
    ரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்  ரஷ்யா

    பிரதமர் மோடி

    சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி  அண்ணாமலை
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி  புது டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023