NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 
    சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார்

    சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 

    எழுதியவர் Nivetha P
    Aug 17, 2023
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ்கார்டன் இல்லம் அவரது அண்ணன் மகள் மற்றும் மகனான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் வாரிசு என்பதால் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே, போயஸ் கார்டனில் ஜெயா டிவி கட்டிடத்தின் காம்பவுண்ட் அருகே அமைந்துள்ள பிள்ளையார் கோயிலுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக சென்னை தி.நகரில் வசிக்கும் பூசாரி ஹரிஹரன்(42)பூஜை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

    கடந்த 15ம்தேதி, இவருக்கும், போயஸ் கார்டன் இல்லத்தில் தேசியக்கொடியினை ஏற்றச்சென்ற ஜெ.தீபாவுக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனால் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஹரிஹரன், ஜெ.தீபா மீது புகாரளித்தார்.

    அதில் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா அனுமதியுடனும் அவரது மறைவிற்கு பிறகு சசிகலா அனுமதியுடனும் கோயிலுக்கு பூஜைச்செய்து வருவதாக கூறியுள்ளார்.

    புகார் 

    தனது சகோதரர் ஜெ.தீபக் தனக்கு எதிராக செயல்படுகிறார் - ஜெ.தீபா குற்றச்சாட்டு 

    அதற்கான செலவும், சம்பளமும் சசிகலா தான் கொடுத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

    சுதந்திர தினம் அன்று அங்கு வந்த ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்,"இனி இக்கோயிலில் பூஜை செய்யக்கூடாது, மீறி செய்தால் கொலை செய்து விடுவோம்" என மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து நேற்று(ஆகஸ்ட்.,16)பூசாரி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்த ஜெ.தீபா மற்றும் அவரது கணவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

    அப்போது சசிகலா தூண்டுதலால் தான் பூசாரி தங்கள்மீது புகாரளித்துள்ளார் என்றும், அவர் தான் தன்னை ஒருமையில் பேசியதாகவும் ஜெ.தீபா கூறினார்.

    சசிகலாவுடன் சேர்த்துக்கொண்டு தனது சகோதரர் ஜெ.தீபக் தனக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறிய ஜெ.தீபா, சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    சசிகலா

    சமீபத்திய

    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் அமெரிக்கா

    ஜெயலலிதா

    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு ஜெயலலிதா
    பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன்  பாஜக
    ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம்  ஜெயலலிதா

    ஜெயலலிதா

    பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள் அதிமுக
    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் தமிழ்நாடு
    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி  ஜெயலலிதா

    சசிகலா

    அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025