NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை
    பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை

    பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை

    எழுதியவர் Nivetha P
    Nov 21, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அதன்படி அங்குள்ள ஊத்து பகுதியில் நேற்று(நவ.,20)காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக 92 மி.மீ.மழை பதிவாகியிருந்தது.

    அதேபோல் மாஞ்சோலை பகுதியிலும், காக்காச்சி பகுதியிலும் 82 மி.மீ., மழை பதிவானது.

    நாலுமுக்கு பகுதியில் 65 மி.மீ., மழை பதிவானது.

    மேலும் அணை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 143 அடி நீர்மட்ட அளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 102.75 அடிக்கு இருந்தது.

    தொடர்ந்து, அணைக்கு வினாடிக்கு 1,510 கன அடி நீர் வந்து கொண்டிருந்துள்ளது. 304 கன அடி நீர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் 70.85 அடிக்கு உயர்ந்திருந்தது.

    மழை 

    நம்பி கோயிலுக்கு செல்ல 2வது நாளாக தடை 

    தொடர்ந்து, மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,560 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 35 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

    இதனிடையே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள களக்காடு தலையணையில் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்றோடு(நவ.,21) தொடர்ந்து 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அங்கு அமைந்துள்ள பூங்காவை பார்வையிடவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கவும், வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பி கோயிலுக்கு செல்லவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    கனமழை
    சுற்றுலா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை காவல்துறை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு வைரல் செய்தி
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    கனமழை

    அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்  வானிலை ஆய்வு மையம்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்

    சுற்றுலா

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா? சென்னை
    இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா? சுற்றுலாத்துறை
    காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள் சுற்றுலாத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025