NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை;

    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் அடிப்படையில், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    கடிதத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மீட்பு பணிக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க, மாவட்ட அளவில் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கனமழை

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இன்று (அக்டோபர் 11) முதல் ஐந்து நாட்களுக்கு பின்வரும் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:-

    11.10.2024: திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    12.10.2024: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 13-15 வரையிலான வானிலை முன்னறிவிப்பு

    13.10.2024: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

    14.10.2024: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    15.10.2024: நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள், மற்றும் அவசர உதவிகளை எளிதாக்க, அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தேவையான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழகம்
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா

    தமிழக அரசு

    மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு மருத்துவத்துறை
    அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு சென்னை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஆதார் கார்டில் கைரேகை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் மறுப்பா? தமிழக அரசு கூறுவது என்ன? ஆதார் புதுப்பிப்பு

    தமிழகம்

    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு கமல்ஹாசன்
    செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா? மு.க.ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    வானிலை அறிக்கை

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்
    தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025