NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்
    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்

    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Jun 23, 2023
    05:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்மையில் ஒரு கொலை வழக்கின் தண்டனையினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

    அப்போது தீவிர குற்றவழக்குகளின் விசாரணை தரத்தினை மேம்படுத்த அதற்கென தனி சிறப்பு பிரிவினை ஏன் அமைக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    அதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் எம்.எஸ்.ரமேஷ் என்னும் நீதிபதிகள் முன்பு இன்று(ஜூன்.,23)விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக டிஜிபி சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 11 தாலுக்காவில் தீவிர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையானது சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

    உத்தரவு 

    தகுந்த விதிகளை வகுப்பது என்பது முக்கியமான பணி என்பதால் அதில் அவசரம் வேண்டாம் - நீதிபதிகள் 

    மேலும், இதனை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அதே போல், டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்க தகுந்த விதிகளை வகுக்கும் பணியானது கடைசி கட்டத்தில் உள்ளது என்றும், அதனை முழுமையாக வகுத்து முடிக்க 2 வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து, சிறப்பு பிரிவுக்களுக்கென தனி காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்க தகுந்த விதிகளை வகுப்பது என்பது முக்கியமான பணி என்பதால் அதில் அவசரம் வேண்டாம் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து, 2 வார கால அவகாசம் கோரப்பட்டிருந்ததையடுத்து, 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025