NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம்

    ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த மத நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

    அது நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT), இன்று கிட்டத்தட்ட 300 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

    அதிகமான மக்கள் அந்த இடத்தில் கூடியதே பலரின் உயிரிழப்புக்கு காரணமாகியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதில் எதுவும் சதி நடந்திருக்கிறதா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், SIT அறிக்கையின் அடிப்படையில் உள்ளூர் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்(SDM), ஒரு வட்ட அதிகாரி மற்றும் நான்கு பேரை உத்தரபிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.

    உத்தரபிரதேசம் 

    மூத்த அதிகாரிகளுக்கு சரியான தகவலை வழங்காத அதிகாரிகள் இடைநீக்கம் 

    இந்த வழக்கை மேலும் ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ள SIT அறிக்கை, இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த உள்ளூர் நிர்வாகத்தின் தரப்பில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

    இதற்கிடையில், ஹத்ராஸில் கடந்த வாரம் மத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுவின் நிர்வாகம், அந்த கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்யவில்லை எனக் கூறியுள்ளது.

    உள்ளூர் காவல்துறையும் நிர்வாகமும் இந்த நிகழ்வை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மூத்த அதிகாரிகளுக்கு சரியான தகவலை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    அந்த நிகழ்ச்சியில் 80,000 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என அதன் நிர்வாகம் அனுமதி வாங்கி இருக்கிறது. ஆனால், அதில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை இந்தியா
    "பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு  அயோத்தி
    கும்பாபிஷேகத்தை அடுத்து அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் நரேந்திர மோடி
    அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது அயோத்தி

    இந்தியா

    பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்  ஆந்திரா
    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை  டெல்லி
    சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு  அமெரிக்கா
    'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை  மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025