NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்

    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் மாநில போக்குவரத்து கழகத்தில் ட்ரைவராக பணிபுரிபவர் பர்மால் அஹிர்.

    40 வயதாகும் இவர் சோம்நாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தினை எடுத்துள்ளார்.

    இந்த பேருந்தினை அவர் மறுநாள் காலை 7.05 மணியளவில் ராதண்பூர் நகர் வரை கொண்ட சென்று அதிலுள்ள பயணிகளை இறக்கிவிட வேண்டும் என்பது அந்த போக்குவரத்து கழகத்தின் போக்குவரத்து விதிகள் ஆக விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ராதன்பூரில் இருந்து 15 கிமீ., தொலைவிற்கு முன்னதாக அவர் வராஹி என்னும் இடத்தில் காலையில் டீ அருந்த பேருந்தினை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

    அதன் பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது திடீரென பர்மால் அஹிருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

    பேருந்து 

    சீட்டுலயே சரிந்து விழுந்த பர்மால் அஹிர் 

    ஆனால் அவர் வேறெங்கும் வாகனத்தினை நிறுத்தாமல் வண்டியினை தொடர்ந்து ஒட்டி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பேருந்து நிறுத்தத்திற்கு இந்த பேருந்தானது 15 நிமிட கால தாமதத்தோடு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    எனினும், அவர் தனது பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறங்குவதை பார்த்த பின்னர் பர்மால் அஹிர் சீட்டிலேயே சரிந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பேருந்து நடத்துநர் மற்றும் அங்கிருந்தோர் அவரை உடனடியாக ராதண்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை தெரிவித்துள்ளனர்.

    தன்னை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் அவரது கடமையினை செய்து முடித்த அந்த ஓட்டுநரின் மரணம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    இந்தியா
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    இந்தியா

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்: வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை பிரதமர் மோடி
    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் பூட்டான்

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் வாகனம்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025