NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
    பாலத்தின் சுமை தாங்கும் திறனை மதிப்பிடுவதற்கு எந்தவொரு நிபுணர் குழுவும் நியமிக்கபடவில்லை

    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    07:46 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தின் மோர்பியில் அக்டோபர் மாதம் இடிந்து விழுந்து 135 பேரைக் கொன்ற விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அய்சுக் படேல் இன்று(ஜன 31) உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் சென்ற வாரம் வெளியானது.

    இந்த சம்பவம் நடந்ததில் இருந்து படேல் தலைமறைவாக இருந்தார் என்று கூறப்பட்டது. மேலும், கைது செய்வதை தவிர்க்க ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.

    சுவர் கடிகாரங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான அஜந்தா பிராண்டின் கீழ்வரும் ஓரேவா குழுமத்திற்கு, பழமையான மோர்பி தொங்கு பாலத்தை சீரமைப்பது மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

    குஜராத்

    தடவியல் சோதனையில் வெளிவந்த தகவல்கள்

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஓரேவா குழுமத்தின் பல குறைபாடுகளை மேற்கோள் காட்டியுள்ளது.

    தரமற்ற பராமரிப்பு, பாலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் டிக்கெட்டுகளை தடையின்றி விற்பனை செய்தது போன்ற குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    துணை ஒப்பந்ததாரர்கள், டிக்கெட் எழுத்தர்களாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் உட்பட, ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேருடன் படேல் 10வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்டிருந்தார்.

    துருப்பிடித்த கேபிள்கள், உடைந்த நங்கூரம் மற்றும் தளர்வான போல்ட் ஆகியவை சீரமைப்பின் போது மாற்றப்படவில்லை என்பது தடயவியல் சோதனைகளில் தெரியவந்துள்ளது.

    மேலும், பாலத்தை பொதுமக்களுக்கு திறப்பதற்கு முன்பு அதன் சுமை தாங்கும் திறனை மதிப்பிடுவதற்கு எந்தவொரு நிபுணர் குழுவும் நியமிக்கபடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    இந்தியா

    பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025