NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
    இந்தியா

    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023, 07:46 pm 1 நிமிட வாசிப்பு
    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
    பாலத்தின் சுமை தாங்கும் திறனை மதிப்பிடுவதற்கு எந்தவொரு நிபுணர் குழுவும் நியமிக்கபடவில்லை

    குஜராத்தின் மோர்பியில் அக்டோபர் மாதம் இடிந்து விழுந்து 135 பேரைக் கொன்ற விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அய்சுக் படேல் இன்று(ஜன 31) உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் சென்ற வாரம் வெளியானது. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து படேல் தலைமறைவாக இருந்தார் என்று கூறப்பட்டது. மேலும், கைது செய்வதை தவிர்க்க ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். சுவர் கடிகாரங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான அஜந்தா பிராண்டின் கீழ்வரும் ஓரேவா குழுமத்திற்கு, பழமையான மோர்பி தொங்கு பாலத்தை சீரமைப்பது மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

    தடவியல் சோதனையில் வெளிவந்த தகவல்கள்

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஓரேவா குழுமத்தின் பல குறைபாடுகளை மேற்கோள் காட்டியுள்ளது. தரமற்ற பராமரிப்பு, பாலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் டிக்கெட்டுகளை தடையின்றி விற்பனை செய்தது போன்ற குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துணை ஒப்பந்ததாரர்கள், டிக்கெட் எழுத்தர்களாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் உட்பட, ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேருடன் படேல் 10வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்டிருந்தார். துருப்பிடித்த கேபிள்கள், உடைந்த நங்கூரம் மற்றும் தளர்வான போல்ட் ஆகியவை சீரமைப்பின் போது மாற்றப்படவில்லை என்பது தடயவியல் சோதனைகளில் தெரியவந்துள்ளது. மேலும், பாலத்தை பொதுமக்களுக்கு திறப்பதற்கு முன்பு அதன் சுமை தாங்கும் திறனை மதிப்பிடுவதற்கு எந்தவொரு நிபுணர் குழுவும் நியமிக்கபடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    குஜராத்

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    இந்தியா

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு

    குஜராத்

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு இந்தியா
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை இந்தியா
    மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ வைரல் செய்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023