NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே 
    பசுமை புத்தாய்வு திட்டம் - துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே 

    எழுதியவர் Nivetha P
    Aug 21, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 'முதலமைச்சர் பசுமை புத்தாய்வு திட்டத்தினை' துவங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி 2021-2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கான அறிவிப்பினை சுற்று சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு இந்த திட்டத்திற்கான அரசாணையினை வெளியிட்டது.

    இளைஞர்கள் 

    இளைஞர்கள் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாக செயல்பட முடியும் 

    இயற்கை எழிலை பாதுகாத்து, காலநிலை மாற்றங்களால் நிகழும் பாதிப்புகளை குறைப்பதற்கான எளியமுறை தொழில்நுட்ப முறைகளை வகுக்க ஏதுவாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

    மேலும், சுற்றுசூழலினை பாதுகாக்கும் பணிகளில் இளைஞர்களை அதிகளவு ஈர்க்கும் விதமாகவே இத்தகைய திட்டத்தினை அரசு அறிவித்தது என்றும் கூறப்படுகிறது.

    இதன்படி, இந்த திட்டம் இளைஞர்கள் இத்திட்டத்தில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாக இணைந்து செயல்பட ஓர் நல்வாய்ப்பாக கருதப்படுகிறது.

    நிதி 

    சுற்றுசூழல் பிரச்சனைகள் குறித்த கொள்கை வகுக்கப்படும் 

    இந்த திட்டத்தில் ஓர் பசுமை ஆர்வலரின் முதன்மை பணி என்னவென்றால், மாவட்ட அளவில் உள்ள சுற்றுசூழல் பிரச்சனைகளை குறித்த கொள்கையினை வகுத்து அறிவிப்பதே ஆகும் என்றும் கூறப்படுகிறது.

    இத்திட்டம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், தகுதியான தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படும் இசைவாணைக்கு பதில் கால அளவினை நீட்டித்து தொகுப்பாக வழங்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    பசுமை பூங்கா 

    சென்னையில் பசுமை பூங்கா 

    அதேபோல் சுற்றுசூழலை மிக கவனமாக பாதுகாக்கும் தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு ரூ.1 கோடி மதிப்பில் 'பசுமை முதன்மையாளர் விருது' வழங்கப்படும்.

    ரூ.32 கோடி செலவில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நவீனமயமாக்கப்படும்.

    சென்னை மாவட்டம் ஆயிரவிளக்கு பகுதியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து, தமிழக சுற்றுசூழல் துறை மூலம் ரூ.20 கோடி செலவில் கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

    தமிழக முதல்வர் 

    'பசுமை புத்தாய்வு' திட்டத்தினை துவக்கி வைத்தார் முதல்வர் 

    இந்நிலையில், இன்று(ஆகஸ்ட்.,21) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பரப்புவது மற்றும் மாவட்ட பசுமை கனவுகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் 'பசுமை புத்தாய்வு' திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்.

    இளைஞர்களின் திறன், தமிழகத்தின் ஆட்சி ஓர் தனித்துவம் மிக்கது என்பதை நிரூபிக்கும் வகையில், உலகளவிலான சிறந்த உத்திகள் கொண்டு இந்த திட்டம் செயல்படும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    சென்னை

    சமீபத்திய

    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை சிபிஐ
    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்  வைரஸ்
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் சென்னை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி

    மு.க ஸ்டாலின்

    கவர்னர் குறித்து ஸ்டாலின் எழுதிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி  ஆர்.என்.ரவி
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மதுரை
    தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்! தமிழக அரசு

    சென்னை

    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்  மெரினா கடற்கரை
    எனக்கு அதிகளவில் வேலையும் இல்லை, அதிகாரமும் இல்லை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  பருவமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025