NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு
    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு

    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 10, 2023
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    விமான நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களைப் பொருத்த ரூ.1,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் AAI (Airport Authority of India) அமைப்பு.

    தற்போது உலோகத்தால் ஆன பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கண்டறியும் வகையில், மெட்டல் டிடெக்டர்களே விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை மாற்றி, முழு உடலையும் பரிசோதனை செய்யும் வகையிலான மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய ஸ்கேனர்களை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    மேலும், நமது கைப்பைகளை சோதனை செய்யவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்ட புதிய ஸ்கேனர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    AAI அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 43 விமான நிலையங்களில் இந்த புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா

    எப்போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது?

    மேற்கூறிய படி 43 விமான நிலையங்களில் பொருத்துவதற்கு 131 முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களையும், 600 கைப்பை ஸ்கேனர்களையும் வாங்கத் திட்டமிட்டிருக்கிறது AAI.

    முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களில் அதிகபட்சமாக கொல்கத்தாவில் 13 ஸ்கேனர்களும், சென்னையில் 12 ஸ்கேனர்களும், கோவாவில் 8 ஸ்கேனர்களும் பொருத்தப்படவிருக்கின்றன.

    இந்த ஒப்பந்தப் புள்ளியானது செப்டம்பர் மாதம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி செய்யப்பட்ட பிறகே அவை எப்போது விநியோகம் செய்யப்படும் என்பது தெரியவரும். இந்த புதிய ஸ்கேனர்களானது விமான நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப்படுகிறது.

    தற்போது கைப்பைகளை சோதனை செய்யும் ஸ்கேனர்களில் மின்னணு சாதனங்களை நாம் தனியே எடுத்து வைக்க வேண்டிய இருக்கும். புதிய ஸ்கேனர்களில் அப்படி செய்ய வேண்டிய தேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    விமானம்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    விமான சேவைகள்

    இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்
    கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம் விமானம்
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா இந்தியா
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா

    விமானம்

    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு சென்னை
    விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு சென்னை

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 26 கொரோனா பாதிப்பு கொரோனா
    தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் பாஜக
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட் ஃப்ளிப்கார்ட்

    மத்திய அரசு

    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்! இந்தியா
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025