NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது 
    இருபது வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரும் ரயில் விபத்து இதுவாகும்.

    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.

    அண்மையில் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 500 கிமீ தொலைவில், மேற்கு ஒடிசாவின் பர்கர் பகுதியில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகியது.

    தனியார் சிமென்ட் தொழிற்சாலையால் இயக்கப்படும் சரக்கு ரயிலின் சில வேகன்கள் பர்கர் மாவட்டத்தின் மெந்தபாலி அருகே தொழிற்சாலை வளாகத்திற்குள் தடம் புரண்டதாகவும், "இந்த விஷயத்தில் ரயில்வேயின் பங்கு எதுவும் இல்லை" என்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது.

    details

    இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை

    துங்ரி சுண்ணாம்பு சுரங்கங்களுக்கும் பர்கரில் உள்ள ஏசிசி சிமென்ட் ஆலைக்கும் இடையே ஒரு குறுகிய தனியார் ரயில் பாதை உள்ளது.

    இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது. இந்திய ரயில்வே அமைப்புடன் எந்த வகையிலும் இவை இணைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரயில் தடம் புரண்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சில பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்களால் ஏற்பட்ட விபத்தில் 275 பேர் கொல்லப்பட்டனர்.

    இருபது வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரும் ரயில் விபத்து இதுவாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஒடிசா
    ரயில்கள்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    இந்தியா

    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  விளையாட்டு வீரர்கள்
    மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம்  டெல்லி
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு மத்திய அரசு
    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி கொரோனா

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா

    ரயில்கள்

    இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம் இந்தியா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா
    விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா? தொழில்நுட்பம்
    ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025