NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார்
    ஸ்பேசியோ லீஷர் ரிசார்ட்டில் ஒரு குழுவைத் தாக்கியதற்காக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2023
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று(மார் 12) சுற்றுலா பயணிகள் வாள்கள் மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்ததை அடுத்து, "குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்துள்ளார்.

    ஸ்பேசியோ லீஷர் ரிசார்ட்டில் ஒரு குழுவைத் தாக்கியதற்காக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    "இன்று அஞ்சுனாவில் நடந்த வன்முறை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சமூக விரோதிகள் மாநிலத்தில் உள்ள மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். மேலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் சாவந்த் ட்வீட் செய்துள்ளார்.

    இந்தியா

    புகார் அளித்ததால் தொடங்கிய பிரச்சனை

    பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜதின் ஷர்மா, அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அஞ்சுனாவில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே ராய்ஸ்டன் டயஸ், நைரோன் டயஸ் மற்றும் காஷிநாத் அகர்வடேகர் ஆகியோர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆயுதங்களால் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் பகிர்ந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில ஜதின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஒரு கும்பல் தாக்குவது தெரிகிறது.

    ஒரு ஹோட்டல் ஊழியருடனான பிரச்சினையைப் பற்றி ஜதின், ஹோட்டல் மேலாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அதனால் கோபமடைந்த அந்த ஊழியர் தன் நண்பர்கள் சிலரை அழைத்து வந்து, ஹோட்டலுக்கு வெளியே அந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கோவா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு ஆஸ்திரேலியா
    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! ரிலையன்ஸ்
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு காங்கிரஸ்
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை மத்திய அரசு

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED இந்தியா
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! தொழில்நுட்பம்
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025