NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்
    விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே ரூ. 37 கோடி செலவில் ஒரு கண்ணாடி பாலம் அமைக்கப்பட உள்ளது

    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக கூறப்படுகிறது.

    இப்படி வரும் சுற்றுலா பயணிகள் முக்கியமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் அதன் அருகே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையையும் முதன்மை பொழுதுபோக்கு அம்சங்களாக கருதுகின்றனர்.

    இந்த இடங்களுக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த விவேகானந்தா, குகன்,பொதிகை ஆகிய 3 படகுகள் இயங்கி வருகின்றன.

    ஆனால், கடல் சீற்றம் இருந்தாலோ அல்லது சூறைக்காற்று வீசினாலோ இந்த படகுகள் இயங்க முடியாமல் நிறுத்தப்படுகின்றன.

    தமிழ்நாடு

    கன்னியாகுமாரி கண்ணாடி பாலத்தின் விவரங்கள்

    அதனால், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகி விடுகிறது.

    இந்த பிரச்சனையைப் போக்க விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே ரூ. 37 கோடி செலவில் ஒரு கண்ணாடியால் ஆன இணைப்பு பாலத்தைக் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

    கூண்டு வடிவில் கட்டப்பட இருக்கும் இந்த கண்ணாடி இணைப்பு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டிருக்கும்.

    இந்த பாலத்தில் நடந்து போகும் போது வானம், கடல் என்று எல்லாமே தெளிவாக தெரியும். இதில் நடந்து சென்றால் அந்தரத்தில் நடந்து போவது போல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இதை கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை இந்தியா
    இணையத்தளவாசிகளின் கடும் விமர்சனங்களால் மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா பொழுதுபோக்கு
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025