NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
    பாலக்காட்டில் ரயில் மோதியதில் 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு

    பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2024
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கேரள எக்ஸ்பிரஸ், ஷோரனூர் ரயில் நிலையம் அருகே, ரயில் நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோரனூர் பாலம் அருகே உள்ள ரயில் பாதையில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த ​​நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    மோதிய வேகத்தில் துப்புரவு பணியாளர்கள் தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சுமார் பிற்பகல் 3.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

    சடலம்

    ஆற்றில் விழுந்த ஒருவரின் சடலத்தை தேடும் பணி தொடக்கம்

    விபத்து நடந்த இடத்தில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பாரதப்புழா ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் நான்காவது தொழிலாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு ரயில்வே காவல்துறைக் குழு சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "தொழிலாளர்கள் ரயில் நெருங்கி வருவதைப் பார்க்காமல் இருந்திருக்கலாம்.

    இது விபத்துக்கு வழிவகுத்தது. எனினும், தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகின்றன." என்று குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, உயிரிழந்த இந்த நான்கு தொழிலாளர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு!#SunNews | #Kerala | #Railway pic.twitter.com/Uwo4Gi4SVc

    — Sun News (@sunnewstamil) November 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    தமிழகம்
    ரயில்கள்
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கேரளா

    டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்  இந்தியா
    கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு  கூகுள்
    கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு கைது
    கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு பருவமழை

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா? காற்றழுத்த தாழ்வு நிலை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் பேருந்துகள்

    ரயில்கள்

    சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... எந்த வழித்தடங்களில்?  சென்னை
    ஓணத்திற்காக இந்த மாதம் தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம் ஓணம்
    நவம்பர் இறுதி வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு தெற்கு ரயில்வே
    பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம் திருநெல்வேலி

    விபத்து

    மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது ஈரான்
    மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து: 4 பேர் கவலைக்கிடம் இந்தியா
    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது மகாராஷ்டிரா
    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025