NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி 
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி 

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    01:25 pm

    செய்தி முன்னோட்டம்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கு விழுப்புரத்திலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    அவ்வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி கடந்த 2016ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இதுகுறித்த விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று(டிச.,21)இவரது வழக்குக்கு தீர்ப்பு வெளியானது.

    அதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 3 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் என்று உத்தரவிடப்பட்டது.

    எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தண்டனை 

    வழக்கு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை ?

    இந்த 30 நாட்களுக்குள் பொன்முடி மற்றும் அவரது மனைவியும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே அடுத்த 12 நாட்கள்(ஜன.,1 வரை)அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதனால் வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் இவரது வழக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    அவசர வழக்காக இது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்குமா?என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    இதனிடையே பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் வகித்தப்பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய இக்கட்டான சூழலில் பொன்முடி இன்று(டிச.,22)முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.

    இச்சந்திப்பின் பொழுது முதல்வரோடு பொன்முடி இவ்வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    உச்ச நீதிமன்றம்
    சிறை

    சமீபத்திய

    வங்கதேசத் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணி
    அமெரிக்காவில் தான் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல் ஐபோன்
    பாக் என்பது பாகிஸ்தானை குறிப்பிடுகிறதா? மைசூர் பாக் பெயரை மாற்றிய ஜெய்ப்பூர் வணிகர்கள் ஜெய்ப்பூர்
    கூகிள் ஊழியர்களுக்கு இவ்வளவு சலுகைகளா? நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஐந்து சலுகைகள் கூகுள்

    மு.க ஸ்டாலின்

    நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சென்னை
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு டி.ஒய்.சந்திரசூட்
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் தமிழகம்
    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  டெல்லி
    நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா? தீபாவளி

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025