NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்
    ராஜேஷ் தாஸ், பீலா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது

    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 21, 2024
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ராஜேஷ் தாஸ் பதவியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரியும் பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக, விழுப்புரம் நீதிமன்றத்தால், 2023ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.

    அதன் தொடர்ச்சியாக, அவரை விவாகரத்து செய்வதாக பீலா ராஜேஷ் அறிவித்தார்.

    அவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மற்றுமொரு புகாரை பீலா தொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், ராஜேஷ் தாஸ், பீலா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    தகராறு

    எதற்காக தகராறு செய்தார் ராஜேஷ் தாஸ்?

    மே 20 திங்கள் அன்று, ராஜேஷ் தாஸ், சென்னையில் தங்கியுள்ள அவரது வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுப்பினார்.

    இந்த மின்சார துண்டிப்பிற்கு காரணம், அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    காரணம், பீலா தற்போது தமிழகத்தின் எரிசக்தி செயலாளராக உள்ளார்.

    குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பை துண்டித்து, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் பீலா என ராஜேஷ் தெரிவித்தார்.

    டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, மே 19, ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பை துண்டிக்க, தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ராஜேஷ் தாஸின் வீட்டிற்குச் சென்றனர்.

    இருப்பினும், அவர் எதிர்த்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறினர். மறுநாள், மே 20, மின்வாரிய அதிகாரிகள் மாநில எரிசக்தி செயலாளரின் கடிதத்துடன் திரும்பினர்.

    மின்சாரம் துண்டிப்பு

    முறையான நீதிமன்ற உத்தரவின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் கருத்து 

    "நான் வீட்டில் வசிப்பதால், சப்ளையை துண்டிக்கும்முன் எழுத்துப்பூர்வமாக என் கருத்தைத் பெறவேண்டும். மின் இணைப்பில் எந்த நிலுவையோ அல்லது நீதிமன்ற உத்தரவோ அவர்களிடத்தில் இல்லை. வீட்டு உரிமையாளர் அவ்வாறு செய்ய விரும்பினாலும், குத்தகைதாரர் இருக்கும்போது EB அதைச்செய்ய முடியாது. ஆனால் அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே உள்ள மின்கம்பத்தில் ஏறி சப்ளையை துண்டித்தனர்" என்று ராஜேஷ் தெரிவித்தார்.

    குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பீலா, கடந்த 3 மாதங்களாக வீடு காலியாக இருப்பதாகவும், மின் இணைப்பு மற்றும் நிலம் தனது பெயரில் உள்ளதால் தேவையில்லாமல் மின்கட்டணத்தில் செலவு செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.

    "ஆக்கிரமிப்பாளர் ஆதார ஆவணத்தை வழங்க போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. அவர் அதை வழங்கத் தவறியதால், டாங்கெட்கோ அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்தனர்" எனத்தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்
    விழுப்புரம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா தமிழக அரசு
    மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்  தமிழ்நாடு செய்தி
    தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை மலையாள திரையுலகம்

    தமிழ்நாடு செய்தி

    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல் செந்தில் பாலாஜி
    விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி விசிக
    ஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு
    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  தமிழக அரசு

    தமிழகம்

    தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது தமிழக அரசு
    தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு தேர்தல்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025