NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்
    கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த வனத்துறை

    கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்

    எழுதியவர் Nivetha P
    Aug 18, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    கொடைக்கானலில் 12 மைல் அளவிலான சுற்றுச்சாலையில் தான் குணா குகை, மோயர் பாயிண்ட், தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்கள் அமைந்துள்ளது.

    இந்த இடங்கள் அனைத்தும் சமீபக்காலத்தில் மூடப்பட்ட நிலையில் இன்று(ஆகஸ்ட்.,18) முதல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    அதன்படி, கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்ல நுழையும் வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு சான்றிதழ் என 4 சான்றிதழ்கள் கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் 

    சான்றிதழ்கள் இல்லையெனில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை 

    மேற்கூறப்பட்ட சான்றிதழ்கள் இல்லையெனில் அந்த வாகனம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல், அந்தந்த சுற்றுலாத்தலங்களில் தான் இதுவரை சுற்றுலாப்பயணிகள் உள்ளே நுழைவதற்கான கட்டணமும், வாகன நுழைவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் இனிமேல் இதற்கான கட்டணங்கள் மொத்தமும் மோயர் பாயிண்டில் வைத்தே வசூலிக்கப்பட்டு அங்கேயே அதற்கான ரசீதுகளும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, பேரிஜம் ஏரி பகுதிக்கு நாளொன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என்றும் வனத்துறை அதிகாரி யோகேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொடைக்கானல்
    வனத்துறை

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    கொடைக்கானல்

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை சுற்றுலாத்துறை
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  அரசு மருத்துவமனை
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  தமிழ்நாடு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025