NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
    இன்று காலை 4:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Nov 11, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கிராமத்தில் உள்ள சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலத்தில் இன்று ஒரு அரசு விரைவுப் பேருந்து(SETC) ஆம்னிபஸ் மீது மோதியதால் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

    அரசுப் பேருந்து ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது பைரோஸ்(37), சென்னைக்கு அடுத்துள்ள கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த எஸ். ரித்திகா(32), உளுந்தூர்பேட்டையைச்(கள்ளக்குறிச்சி) சேர்ந்த கே.ஏழுமலை(47), ஆந்திராவில் சித்தூரை சேர்ந்த பி.அஜீத்(25), கர்நாடகாவின் கோலாரை சேர்ந்த என்.சையத் மும்தாஜ்(42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும், விபத்துக்குள்ளான பேருந்துகளின் ஓட்டுநர்களான எல்லுமலை மற்றும் சையத் ஆகியோரும் உயிரிழந்தனர்.

    ட்ஜ்வ்க்ன்

    விபத்து எப்படி நடந்தது?

    காயமடைந்த 64 பயணிகளில், நான்கு பேர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் வாணியம்பாடியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த SETC பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு மீடியனை உடைத்துவிட்டு, எதிர்திசையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை 4:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

    விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.ஆம்னி பேருந்து ஓட்டுநர் சையத் வேலூரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பெங்களூர்
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 29 தங்கம் வெள்ளி விலை
    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர் அமெரிக்கா
    இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ஸ்டாலின்
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை இந்தியா

    பெங்களூர்

    30 நிமிட பயணத்திற்கு 3 மணி நேரக் காத்திருப்பு.. பெங்களூருவில் ருசிகர சம்பவம் வாழ்க்கை
    உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு  போக்குவரத்து விதிகள்
    அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை  தமிழக அரசு
    பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் பள்ளிக்கல்வித்துறை

    விபத்து

    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025