NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

    எழுதியவர் Nivetha P
    Apr 19, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

    இதனால் அங்குள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை விசாரித்தது.

    தொடர்ந்து ஆக்கிரமைப்புகள் அகற்றப்பட்டது குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்பேரில், லூப்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், மீனவர்களின் எதிர்ப்பினை எதிர்கொண்டு 75 மீன்கடைகள்,15 குடிசைகள்,21 பொட்டிக்கடைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சித்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மீன்சந்தை கட்டுமான பணிகள் முடியும்வரை சாலையின் மேற்கு பக்கத்தில் மீன் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

    போக்குவரத்தினை முறைப்படுத்துகிறோம் என்று சென்னை மாநகராட்சி கூறியது.

    இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    மீன்

    வழக்கின் விசாரணை கே]ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு 

    அதனடிப்படையில், இன்று(ஏப்ரல்.,19)இந்த வழக்கு நீதிபதிகள் பாலாஜி மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும்,

    போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மீன்கடைகள் அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் மீன்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் சென்னை மெரினா கடற்கரை லூப்சாலையில் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதுகுறித்த விசாரணை வரும் ஜூன் 19ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த உத்தரவின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெரினா கடற்கரை
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    சென்னை

    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம் கொரோனா
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு கோலிவுட்
    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் பருவகால மாற்றங்கள்

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை

    சென்னை உயர் நீதிமன்றம்

    18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு தமிழ்நாடு
    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா
    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட செய்திகள்
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025