NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

    எழுதியவர் Nivetha P
    Apr 19, 2023
    05:25 pm
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

    சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் அங்குள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை விசாரித்தது. தொடர்ந்து ஆக்கிரமைப்புகள் அகற்றப்பட்டது குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், லூப்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், மீனவர்களின் எதிர்ப்பினை எதிர்கொண்டு 75 மீன்கடைகள்,15 குடிசைகள்,21 பொட்டிக்கடைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சித்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மீன்சந்தை கட்டுமான பணிகள் முடியும்வரை சாலையின் மேற்கு பக்கத்தில் மீன் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும். போக்குவரத்தினை முறைப்படுத்துகிறோம் என்று சென்னை மாநகராட்சி கூறியது. இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    2/2

    வழக்கின் விசாரணை கே]ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு 

    அதனடிப்படையில், இன்று(ஏப்ரல்.,19)இந்த வழக்கு நீதிபதிகள் பாலாஜி மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மீன்கடைகள் அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மீன்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் சென்னை மெரினா கடற்கரை லூப்சாலையில் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுகுறித்த விசாரணை வரும் ஜூன் 19ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த உத்தரவின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    மெரினா கடற்கரை
    சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை காவல்துறை
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  தமிழ்நாடு
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் காவல்துறை

    மெரினா கடற்கரை

    சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு சென்னை
    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை கருணாநிதி
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் குடியரசு தினம்

    சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம் கொரோனா
    ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! கோலிவுட்
    அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை  அதிமுக
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023