NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது
    சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2023
    08:33 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 10 நாட்களாக உத்தரகாண்டில் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது.

    தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்காக நேற்று இரவு இடிபாடுகளுக்குள் வெற்றிகரமாக நுழைக்கப்பட்ட ஆறு அங்குல குழாய் வழியாக, சுரங்கப்பாதைக்குள் அனுப்பப்பட்ட கேமரா மூலம் தொழிலாளர்களின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

    அந்த தொழிலாளர்களுடன் மீட்பு அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

    வெளியான வீடியோவில், மீட்பு அதிகாரிகள், குழாய் மூலம் அனுப்பப்பட்டுள்ள கேமராவின் முன் தொழிலாளர்களை வரச் சொல்லி, அவர்களிடம் உரையாடுவது போல காட்சிகள் உள்ளது.

    card 2

    குழாய் மூலம் உணவு வழங்க திட்டம்

    நேற்று வெற்றிகரமாக உள்நுழைக்கப்பட்ட குழாய் மூலம், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு, கண்ணாடி பாட்டில்கள் மூலம் உணவு அனுப்ப பட்டது. மருத்துவர்களும், நிபுணர்களும் பரிந்துரைத்ததன் பேரிலேயே, உணவு தயாரிக்கப்பட்டது எனவும் ANI தெரிவிக்கிறது.

    மேலும், இந்த குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு மொபைல்கள் மற்றும் சார்ஜர்கள் அனுப்பப்படும் என மீட்பு பணி பொறுப்பாளர் கர்னல் தீபக் பாட்டீல் தெரிவித்தார்.

    முன்னதாக, சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிடப்பட்ட இரும்பு குழாய்கள் மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தாலும், சூடாக உணவு அனுப்பப்படுவது இதுவே முதல்முறை.

    கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனிதத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் தேசிய உள்கட்டமைப்பு முயற்சியான சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

    card 3

    "எங்களை சீக்கிரம் காப்பாற்றுங்கள்"

    "உத்தர்காசி, சில்க்யாராவில் கட்டுமான இடிபாடுகளுக்கிடையே, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இடிபாடுகளுக்கிடையே 6 இன்ச் அகலம் கொண்ட குழாய் ஒன்று வெற்றிகரமாக நுழைக்கப்பட்டுள்ளது. இப்போது இதன் மூலம், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் எளிதில் அனுப்பப்படும்" என உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி எக்ஸ்-இல் பதிவிட்டிருந்தார்.

    இதற்கிடையே, கேமராவில் மீட்பு குழுவினருடன் உரையாடிய தொழிலாளர்கள், "எங்களுக்கு உணவு கிடைக்கிறது ஆனால் நாங்கள் உடலளவிலும், மனஅளவிலும் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளோம். தயவு செய்து எங்களை சீக்கிரம் வெளியே கொண்டு வாருங்கள். நாளுக்கு நாள் இங்கே மிகவும் கடினமாக உள்ளது" என கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

    ட்விட்டர் அஞ்சல்

    சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ 

    #WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A

    — ANI (@ANI) November 21, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    சுரங்கத்தின் மறுவாயில்

    #WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Visuals from the other end of the tunnel from Barkot side. Operation to rescue the 41 trapped workers is ongoing on another side of the tunnel.

    First visuals of the workers emerged this morning as an endoscopic flexi camera… pic.twitter.com/HzLAYNNLMF

    — ANI (@ANI) November 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் டெல்லி
    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் மகாராஷ்டிரா
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  தீபாவளி
    சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து லியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025