NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 14 பதஞ்சலி உரிமங்களை உத்தரகாண்ட் ரத்து செய்ததற்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    14 பதஞ்சலி உரிமங்களை உத்தரகாண்ட் ரத்து செய்ததற்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு

    14 பதஞ்சலி உரிமங்களை உத்தரகாண்ட் ரத்து செய்ததற்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    07:43 pm

    செய்தி முன்னோட்டம்

    பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான தவறான விளம்பர வழக்கில் உத்தரகாண்ட் மாநில உரிம ஆணையம் செயலற்று இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    அதிகாரம் எல்லாவற்றையும் மறைக்க முயற்சிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் குறித்து பேசிய உச்ச நீதிமன்றம், அதன் உத்தரவுகளுக்கு பதஞ்சலி இணங்கவில்லை என்று குறிப்பிட்டது.

    தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    அந்த வழக்கில், பொய் தகவல்களை பரப்பியதற்காக பதஞ்சலி நிறுவனம் ஒவ்வொரு செய்தித்தாளிலும் மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்தியா 

     நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்: நீதிமன்றம் 

    அதன் அசல் பதிவுகளைக் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பதஞ்சலியிடம் நீதிமன்றம் கூறி இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் பொது மன்னிப்பின் மின் நகலை மட்டுமே சமர்ப்பித்தது.

    அதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையில், பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா பார்மசி தயாரித்த 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமங்கள் ஏப்ரல் 15 அன்று இடைநிறுத்தப்பட்டதாக உத்தரகாண்ட் மாநில உரிம ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில், இதற்கு பதிலளித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதமானது என கேள்வி எழுப்பியது.

    மேலும், நல்ல வேளையாக அதிகாரம் இப்போதாவது தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டதே என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பதஞ்சலி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பதஞ்சலி

    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்  உச்ச நீதிமன்றம்
    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
    பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு உச்ச நீதிமன்றம்
    தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ் பாபா ராம்தேவ்

    உச்ச நீதிமன்றம்

    'ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது': பிரதமர் மோடி  இந்தியா
    உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  எஸ்பிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025