NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி 
    இந்த திட்டத்தின் கீழ் 20 ஆப்பிரிக்க சிறுத்தைகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன.

    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 'தாத்ரி' என்ற பெண் சிறுத்தை இன்று(ஆகஸ்ட்-2) காலை இறந்து கிடந்தது.

    மரணத்திற்கான காரணத்தை அறிய அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

    ஆசிய சிறுத்தைகள் இந்தியாவில் முழுவதுமாக அழைந்துவிட்டதால், மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 'பிராஜெக்ட்-சீட்டா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் 20 ஆப்பிரிக்க சிறுத்தைகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன.

    அப்படி மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்ட 20-சிறுத்தைகளில் 9 சிறுத்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளன.

    சண்டைகள், நோய்கள், விபத்துகள் மற்றும் வேட்டையாடும்போது ஏற்படும் காயங்கள் ஆகியவை இந்த இறப்புகளுக்கு சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    டிஜில்

     ரேடியோ காலர்களைப் பயன்படுத்துவது தான் காரணமா?

    வெப்ப மாற்றங்கள், வானிலை மாற்றங்கள் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சிறுத்தைகள் மீது ரேடியோ காலர்களைப் பயன்படுத்துவதனால் தான் இந்த இறப்புகள் ஏற்படுகின்றன என்ற சர்ச்சையும் உள்ளது.

    ரேடியோ காலர்கள் சிறுத்தைகள் இருக்கும் இடத்தை 'ட்ராக்' செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்.

    இந்த ரேடியோ காலர்கள் எப்போதும் சிறுத்தைகளின் கழுத்திலேயே இருப்பதால், மழை காலங்களில் சிறுத்தைகளுக்கு தோல் நோய் ஏற்பட்டு, அவை உயிருழப்பதாகவும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    மேலும், இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இப்படி உயிரிழப்பது குறித்து, ஆப்பிரிக்க வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்த திட்டத்தை வழிநடத்தும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆப்பிரிக்க நிபுணர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் திட்ட மேலாண்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து இந்தியா
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' வைரல் செய்தி
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    இந்தியா

    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு மத்திய அரசு
    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு சத்தீஸ்கர்
    ஆண்களை விட சிறப்பாக கார் ஓட்டும் பெண்கள்: ஆய்வில் தகவல்  கேரளா
    15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி ஆன்லைன் மோசடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025