NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்

    விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2024
    09:20 am

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி 29-ம் தேதி தங்களது 'டெல்லி சலோ' பேரணி குறித்த எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

    போராட்டங்களை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா(அரசியல் அல்லாத) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா(கேஎம்எம்) ஆகிய அமைப்புகள் அடுத்த வாரத்திற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளன.

    அதுவரை, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இரு போராட்டத் தளங்களிலும் தங்கி இருந்து தங்கள் போராட்ட களத்தை தக்க வைத்துக்கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

    அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முயற்சித்து வருகின்றனர்.

    டெல்லி 

    விவசாயிகளின் கோரிக்கை 

    பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண உயர்வு, போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் 2021இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி" வழங்குதல் ஆகியவற்றை கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கக் குழுவிற்கும் இடையிலான நான்காவது பேச்சு வார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில்(MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்க அரசாங்கம் முன்மொழிந்தது.

    ஆனால், அந்த முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    விவசாயிகள்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    டெல்லி

    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025