Page Loader
விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்

விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்

எழுதியவர் Sindhuja SM
Feb 24, 2024
09:20 am

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 29-ம் தேதி தங்களது 'டெல்லி சலோ' பேரணி குறித்த எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர்கள் அறிவித்துள்ளனர். போராட்டங்களை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா(அரசியல் அல்லாத) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா(கேஎம்எம்) ஆகிய அமைப்புகள் அடுத்த வாரத்திற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளன. அதுவரை, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இரு போராட்டத் தளங்களிலும் தங்கி இருந்து தங்கள் போராட்ட களத்தை தக்க வைத்துக்கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முயற்சித்து வருகின்றனர்.

டெல்லி 

விவசாயிகளின் கோரிக்கை 

பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண உயர்வு, போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் 2021இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி" வழங்குதல் ஆகியவற்றை கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கக் குழுவிற்கும் இடையிலான நான்காவது பேச்சு வார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில்(MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்க அரசாங்கம் முன்மொழிந்தது. ஆனால், அந்த முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர்.