NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு
    குண்டூர் நகரம்பாலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

    ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 12, 2024
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டியைத் தவிர, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பிவி சுனில் குமார், பிஎஸ்ஆர் சீதாராமஞ்சநேயுலு, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆர் விஜய் பால், குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஜி பிரபாவதி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் சென்ற மாதமே ஈமெயில் மூலம் பெறப்பட்டதாகவும், சட்ட ஆலோசனை பெற்றபின்னர் நேற்று இரவு வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு

    Andhra Pradesh police registered an "attempt to murder" case against former chief minister YS Jagan, two senior IPS officers and two retired officials, following a complaint lodged by a TDP MLA, an official said #andhrapradesh #jaganmohanreddy #attempttomurder #nbsnetworks pic.twitter.com/V6Pia0j24N

    — NBS TIMES (@nbstimes) July 12, 2024

    வழக்கின் பின்னணி

    கிரிமினல் சதி என புகார் தெரிவித்துள்ள எம்எல்ஏ

    TDP எம்எல்ஏ ராஜு தனது புகாரில், 2021ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் சிஐடியால் தான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

    ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு கிரிமினல் "சதி" செய்ததால், தான் கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

    முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்த ராஜு, கைது செய்யப்பட்ட பிறகு அவர் உள்ளூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும், சிஐடியிடம் ட்ரான்சிட் கைது வாரண்ட் இல்லை என்றும் அவர் கூறி, குண்டூரில் உள்ள ஏஜென்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    ராஜு கைது செய்யப்பட்டபோது, ​​குமார் சிஐடி தலைவராகவும், சீதாராமஞ்சநேயுலு உளவுப் பிரிவாகவும், பால் ஏஎஸ்பி சிஐடியாகவும், ரெட்டி முதல்வராகவும் இருந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆந்திரா

    திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு திருமணம்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் தெலுங்கானா
    ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு  தெலுங்கானா
    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  தமிழ்நாடு

    முதல் அமைச்சர்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் ஸ்டாலின்
    ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர் தமிழ்நாடு
    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு ஜார்கண்ட்
    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்பெயின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025