NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி?
    31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட கில்லாடி

    31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 07, 2024
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று, 31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் என்று கூறிக்கொண்டு வந்த ஒருவருடன் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தது.

    ஆனால், அந்த நபர் தொடர் மோசடி செய்பவர் என அம்பலப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியில் முடிந்தது.

    ராஜு அல்லது பீம் என்று அழைக்கப்படும் இந்திரராஜ், நீண்ட காலத்திற்கு முன்னர் காணாமல் போனவராக நடித்து குடும்பத்தினரை ஏமாற்றி கொள்ளையடித்து வந்துள்ளது தெரியவந்ததை அடுத்து காசியாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    முன்னதாக, 1993 ஆம் ஆண்டு ஏழு வயதில் தான் கடத்தப்பட்டதாகக் கூறி, ஊடகங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் தனது வீட்டுக்கு வருவதை விளம்பரப்படுத்த உதவுமாறு ராஜு காவல்துறையை அணுகினார்.

    சந்தேகம்

    குடும்பத்தினர் சந்தேகம்

    மகனை 1993 சமயத்தில் தொலைத்த ஒரு குடும்பம் காவல்துறை மூலம் அடையாளங்களை சரிபார்த்து உறுதி செய்து, அவரை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர்.

    எனினும், அவரை சந்தேகத்துடன் பார்த்த காணாமல் போன தந்தை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வைத்துள்ளார்.

    அதில், அவருக்கு இந்த குடும்பத்துடன் தொடர்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, இந்த செய்தியை பார்த்து, சில காலம் முன்னர் இதே நபர் தங்கள் மகன் எனக் கூறி குடும்பத்துடன் சேர்ந்ததாக உத்தரகண்டில் வசிக்கும் ஒரு குடும்பம் புகார் செய்தது.

    இதனால் சந்தேகமடைந்த காவல்துறை டிஎன்ஏ சோதனை மற்றும் விசாரணையை முடுக்கி விட்ட நிலையில், தற்போது குட்டு அம்பலமாகி உள்ளது.

    ஒன்பது குடும்பங்கள்

    ஒன்பது குடும்பங்களை ஏமாற்றிய நபர்

    விசாரணையில் ராஜுவின் நீண்ட நெடிய மோசடி வரலாறு தெரியவந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், 2005 ஆம் ஆண்டு தனது வழக்கமான திருட்டுப் பழக்கத்தால் சொந்தக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    அப்போதிருந்து, அவர் குறைந்தது ஒன்பது குடும்பங்களுடன் இதேபோல் ஏமாற்றி வாழ்ந்துள்ளார்.

    போலீஸ் துணை கமிஷனர் நிமிஷ் பாட்டீல் கூறுகையில், ராஜு அவர்களின் சொத்துக்களுக்காக வீடுகளை குறிவைத்து, குடும்ப உறவுகள் என்ற போர்வையில் சொத்து விவரங்களை அடிக்கடி விசாரித்தார்.

    பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் அவர் மோசடியாக வாழ்ந்த குறைந்தது ஐந்து இடங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    இதே போன்ற குற்றங்களுக்காக 2021இல் சிறையில் அடைக்கப்பட்ட தகவலும் தெரிய வந்த நிலை, காவல்துறை விசாரணையை வேகப்படுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    டிரெண்டிங் கதை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உத்தரப்பிரதேசம்

    அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு காங்கிரஸ்
    'மகள்கள் தோற்றுவிட்டார்கள்': பிரிஜ் பூஷனின் மகன் வேட்புமனு குறித்து சாக்ஷி மாலிக் கருத்து பிரிஜ் பூஷன் சரண் சிங்
    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  கொலை
    ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு வெப்ப அலை எச்சரிக்கை  ராஜஸ்தான்

    இந்தியா

    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகுகளை கைப்பற்றியது இந்திய கடற்படை கடற்படை
    ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி; இபிஎஃப்ஓ 3.0 விரைவில் அறிமுகம் என தகவல் வருங்கால வைப்பு நிதி
    31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசம்
    பிப்ரவரி 2026க்குள் புதிய ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம் பொருளாதாரம்

    டிரெண்டிங் கதை

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! இந்தியா
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025