NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா 

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2024
    09:51 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று ராஜினாமா செய்தார்.

    மக்களவை தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

    அவர் ஏன் பதவி விலகினார் என்பது உடனடியாக தெரியவில்லை.

    கோயல் ராஜினாமா செய்ததால், ஒட்டுமொத்த தேர்தலையும் கண்காணிக்கும் பொறுப்பு தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மீது விழுந்துள்ளது.

    அருண் கோயல் பஞ்சாப் கேடரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் 21 நவம்பர் 2022 அன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைகிறது. கோயல் முன்பு கனரக தொழில்துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றினார்.

    தேர்தல்

    தேர்தலுக்கான தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல் 

    மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று இந்தியா டுடே டிவி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 இன் பிரிவு 11 இன் பிரிவு (1) இன் படி, ஸ்ரீ அருண் கோயல் அளித்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். " என்று ஒரு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அருண் கோயல் மக்களவை தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை மேற்பார்வையிட பல மாநிலங்களுக்கு அவர் பயணம் செய்தார்.

    இதற்கிடையில், அவர் ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்

    மக்களவை

    தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண் தேர்தல்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா? நாடாளுமன்றம்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றம்
    மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள் நாடாளுமன்றம்

    தேர்தல்

    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு  பங்களாதேஷ்
    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ்  காங்கிரஸ்
    தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் அமெரிக்கா ஆதரவு கட்சி வெற்றி  தைவான்
    தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள் காங்கிரஸ்

    தேர்தல் ஆணையம்

    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025