NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / க்ரைம் ஸ்டோரி: மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து கொலை செய்த 4 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    க்ரைம் ஸ்டோரி: மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து கொலை செய்த 4 பேர் கைது

    க்ரைம் ஸ்டோரி: மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து கொலை செய்த 4 பேர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார க்ரைம் ஸ்டோரி: நவாடா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    மேலும் ஒரு குற்றவாளி தலைமறைவாக உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    டிசம்பர் 26 அன்று ஒரு வயதான பெண்ணின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    இதனையடுத்து, நவாடா காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட மூதாட்டியும் அவரது கணவரும் டிசம்பர் 25 ஆம் தேதி கயாவில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து அவர்களின் உறவினர்களைப் பார்க்க சென்றுள்ளனர்.

    தக்ஜயூ

    நான்கு குற்றவாளிகளும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர் 

    வயதான தம்பதியினர், நவாடா ரயில் நிலையத்திலிருந்து இ-ரிக்ஷாவைப் பயன்படுத்தி தங்களது உறவினரின் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

    அப்போது அவர்களை பிக்-அப் செய்த ஆட்டோ டிரைவர், அந்த மூதாட்டியை மட்டும் ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் தப்பி ஓடினார்.

    "குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்த நவாடா காவல்துறையினர் தங்களிடம் உள்ள அனைத்து வசதியையும் பயன்படுத்தி விசாரணையை தொடங்கினர். நாங்கள் சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாக ஆய்வு செய்தோம். இது வழக்கில் திருப்புமுனைக்கு வழிவகுத்தது." என்று காவல்துறை SDPO நவாடா அஜய் பிரசாத் கூறியுள்ளார்.

    விசாரணையின் போது இரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவை மீட்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    க்ரைம் ஸ்டோரி

    சமீபத்திய

    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025