NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 
    கடந்த ஆண்டு, முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததார்கள் என்று முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்பதை உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.

    கடந்த ஆண்டு, ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவுடன், சிவசேனாவை பிளவுபடுத்தி, பெரும்பாலான எம்எல்ஏக்களை கூட்டு சேர்த்து புதிய அரசாங்கத்தை அமைத்தார். இதனையடுத்து, உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    details

    ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் 

    ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். மேலும், அவரது அரசாங்கம் கலைக்கப்படும்.

    அதன் பிறகு, எந்த அணியிடம் அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் இருக்கிறார்களோ, அந்த அணி புதிய அரசாங்கத்திற்கு உரிமை கோரும்.

    இரு தரப்பிலிருந்தும் எந்த எம்எல்ஏக்களாவது அணி மாறுகிறார்களா என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கான முடிவை எடுக்க உள்ளது.

    மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணிக்காக வாதிட்டனர்.

    ஹரிஷ் சால்வே, நீரஜ் கவுல் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவிக்காக பேசினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மகாராஷ்டிரா
    பாஜக
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    இந்தியா

    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  ராஜஸ்தான்
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு பஞ்சாப்
    இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு பாகிஸ்தான்
    அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்? வணிகம்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    பாஜக

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் இந்தியா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் காங்கிரஸ்
    இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து இந்தியா
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை இந்தியா
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் மத்திய அரசு
    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025