NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது
    அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    09:26 pm

    செய்தி முன்னோட்டம்

    கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களிலேயே, இன்று மாலை அமலாக்க இயக்குனரகத்தின் குழு டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு விரைந்தது.

    இந்த வழக்கில் சம்மன் அனுப்ப முதல்வர் வீட்டுக்குச் சென்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அதிகாரிகள் சோதனை வாரண்ட் வைத்திருப்பதாகவும், அவரது வீட்டில் சோதனை நடத்தியது.

    அதன்பின்னரே அவர் கைது நடைபெற்றுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை அனுப்பிய 9 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.

    பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ED விசாரணைக்கு ஆஜராகினால் கைது செய்யப்படலாம் என கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கவலை தெரிவித்திருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது

    Delhi CM and AAP national convenor Arvind Kejriwal arrested by the Enforcement Directorate (ED) in Excise policy case: Sources pic.twitter.com/LaSlephh0v

    — ANI (@ANI) March 21, 2024

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி கட்சி கூறுவது என்ன?

    டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில்,"அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர்வார், சிறையில் இருந்து தனது கடமையை தொடர்ந்து செய்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    "அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சராக இருக்கிறார், தொடர்ந்து இருப்பார்" என்று ஆம் ஆத்மியின் அதிஷி கூறினார். தற்போது அதிஷி அரசாங்கத்தில் 2வது இடத்தில் உள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    "நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம், இன்று இரவு அவசர விசாரணைக்காக பிரார்த்தனை செய்துள்ளோம்" என்று ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.

    கலால் கொள்கை வழக்கு

    டெல்லி கலால் கொள்கை வழக்கு என்றால் என்ன?

    டெல்லி கலால் கொள்கை வழக்கின் கீழ், 2021-22 டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி நடைபெற்றதாக கூறப்பட்டது.

    பின்னர் இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. மொத்த விற்பனையாளர்களின் லாப வரம்பு 5% இல் இருந்து 12% ஆக செயற்கையாக உயர்த்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின.

    மேலும், இந்த ஒழுங்குமுறை கார்டெலைசேஷனை ஊக்குவித்ததாகவும், நிதி ஆதாயத்திற்காக மதுபான உரிமங்களுக்குத் தகுதியற்றவர்கள் பயனடைவதாகவும் அவர்கள் கூறினர்.

    இந்த வழக்கில் தற்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா

    டெல்லி

    டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு விவசாயிகள்
    விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு விவசாயிகள்
    விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்? விவசாயிகள்
    விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல் விவசாயிகள்

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    அமலாக்க இயக்குநரகம்

    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்
    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  செந்தில் பாலாஜி
    4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025