NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை
    கோவாவில் நடைபெறும் SCO கூட்டத்தில் பிலாவல் பூட்டோ பங்கேற்க இருக்கிறார்.

    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த மாதம் நடைபெறவுள்ள SCO உச்சிமாநாட்டின் போது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை என NDTV தெரிவித்துள்ளது.

    அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில் பிலாவல் பூட்டோ பங்கேற்க இருக்கிறார்.

    2014ஆம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார். அதற்கு பிறகு, பாகிஸ்தான் தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

    மே 4-5ஆம் தேதிகளில் நடைபெறும் SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்(CFM) போது பாகிஸ்தான் தூதுக்குழுவை பிலாவல் பூட்டோ வழிநடத்துவார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

    details

    பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாட்டுடன் நட்பு பாராட்ட முடியாது: வெளியுறவுத்துறை அமைச்சர்

    பாகிஸ்தான் நாட்டிற்குள் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது.

    "எங்களுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும்" அண்டை நாட்டுடன் இந்தியா நட்புடன் பழக முடியாது என்று சில நாட்களுக்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி இருந்தார்.

    "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, ஸ்பான்சர் செய்வது போன்ற செயல்கள் இனி நடக்காது என்ற உறுதிப்பாட்டை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். என்றாவது ஒரு நாள் அந்த நிலையை அடைவோம் என்று தொடர்ந்து நம்புகிறோம்." என்று அவர் மேலும் கூறி இருக்கிறார்.

    கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    வெளியுறவுத்துறை
    கோவா

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் டெல்லி
    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  மோடி
    எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!  சச்சின் டெண்டுல்கர்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED ஆம் ஆத்மி
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025