NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி
    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 15, 2024
    10:03 am

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது 75வது வயதில், நீண்டகால உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 14) காலமானார்.

    அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இளங்கோவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    செயற்கை சுவாசம் உள்ளிட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    தலைவர்கள் அஞ்சலி

    அரசியல் தலைவர்கள் அஞ்சலி

    அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி போன்ற முக்கிய பிரமுகர்களும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

    இளங்கோவனின் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக, அவரது மகன் திருமகன் ஈவேராவின் மறைவுக்குப் பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார்.

    தற்போதைய சட்டமன்ற காலத்திற்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளதால், விரைவில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    காங்கிரஸ்
    தமிழகம்

    சமீபத்திய

    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்
    கெனிஷா வாழ்வின் ஒளி... நல்ல தந்தையாக தொடர்வேன்.. ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு ரவி மோகன் பதில் ரவி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 11,096 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரிப்பு தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு மழை
    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை
    2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு விடுமுறை
    பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை தேர்வு

    காங்கிரஸ்

    பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இந்தியா
    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? பாஜக
    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி வாரணாசி

    தமிழகம்

    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 27 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    நெருங்கும் புயல் சின்னம்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தெரிஞ்சுக்கோங்க புயல் எச்சரிக்கை
    தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட் பள்ளிகளுக்கு விடுமுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025