NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு ஹோட்டல்களில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக தகவல்: 90 இறைச்சி பெட்டிகள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு ஹோட்டல்களில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக தகவல்: 90 இறைச்சி பெட்டிகள் பறிமுதல்

    பெங்களூரு ஹோட்டல்களில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக தகவல்: 90 இறைச்சி பெட்டிகள் பறிமுதல்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவில் உள்ள மேற்குப் பிரிவு போலீஸார், KSR ரயில் நிலையத்தின் ஓகாலிபுரம் நுழைவாயிலில் நாய் இறைச்சி வைக்கப்பட்டிருந்த 90 அட்டைப்பெட்டிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட அந்த இறைச்சி, செம்மறி அல்லது ஆடு இறைச்சியாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.

    ஆனால், காவலர் புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள், இறைச்சியின் தன்மை குறித்து சந்தேகம் தெரிவித்தனர்.

    அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சியின் மாதிரிகளை எடுத்து அதை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

    இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க 14 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்தியா 

    பல ஹோட்டல்களுக்கு இந்த இறைச்சி விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம்

    ராஜஸ்தானில் இருந்து தினமும் சுமார் 6 டன் இறைச்சி பெங்களூருக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த இறைச்சியை நாய் இறைச்சியுடன் கலந்து ரசல் மார்க்கெட் மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    "75 முதல் 80 மணிநேரத்திற்கு முந்தைய இறைச்சி, வினிகரில் சுத்தப்படுத்தப்பட்டு, புதியது போல் விற்கப்படுகிறது" என்று அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

    பெங்களூரில் உள்ள பல ஹோட்டல்களுக்கு இந்த இறைச்சி விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

    கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய் இறைச்சியா என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், ஆய்வக சோதனையின் மூலமே உண்மையை உறுதிப்படுத்த முடியும் என்றும் சில உள்ளூர் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்

    சமீபத்திய

    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா

    பெங்களூர்

    வீடியோ: ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட நபர் போலீஸ்காரரை கடித்ததால் பரபரப்பு  இந்தியா
    தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் ஜெயலலிதா
    பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம் இந்தியா
    'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025