NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி

    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 14, 2024
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    இதன் மூலம் 42 ஆண்டுகளில் தோடாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை மோடி பெற்றுள்ளார்.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியின் கூற்றுப்படி, 1982ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இங்கு மேற்கொண்ட பயணமே, இந்திய பிரதமர் ஒருவர் இந்த பகுதிக்கு மேற்கொண்ட கடைசி பயணம் ஆகும்.

    முன்னதாக, தோடா நகரில் உள்ள ஸ்டேடியத்தில் பாதுகாப்பான தேர்தல் பேரணியை உறுதி செய்வதற்காக, தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரட்டை மாவட்டங்கள் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டது.

    ஹரியானா

    ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் பேரணியில் மோடி உரை

    ஜம்மு காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவின் தீம் பார்க்கில் ஒரு பேரணியில் உரையாற்றினார்.

    ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது முதல் பேரணி இதுவாகும். பாஜக மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் உள்ளது.

    மோடியின் பேரணி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடத்தை பார்வையிட்டனர்.

    பாஜக வரவிருக்கும் 2024 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு பிரிவில் உள்ள 43 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்படும். அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளில் முதல் தேர்தல்

    2014 தேர்தலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். மேலும் 370 மற்றும் 35ஏ சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேசமயம், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8இல் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமை, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பேரணியில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    மேலும் மாநிலத்தில் மூன்றாவது முறையாக தாமரை மலரும் என்று வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் முழு முயற்சியையும் செய்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர்
    தேர்தல்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிரதமர் மோடி

    'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல் வினேஷ் போகட்
    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி வயநாடு
    கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி வயநாடு
    அனைத்து காலநிலையையும் தாங்கி வளரக்கூடிய புதிய பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி, 10 பேர் மாயம் விபத்து
    வீடியோ: கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு நிலச்சரிவு
    ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 விமானப்படை வீரர்கள் காயம்  விமானப்படை
    ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி  இந்தியா

    தேர்தல்

    லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா ரஷ்யா
    4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு  பொதுத் தேர்தல் 2024
    அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் பொதுத் தேர்தல் 2024
    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம்  ஆந்திரா

    இந்தியா

    முடிவுக்கு வருகிறது பாரிஸ் பாராலிம்பிக்ஸ்; இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கும் ஹர்விந்தர் சிங், ப்ரீத்தி பால் பாராலிம்பிக்ஸ்
    செப்டம்பர் 11 முதல் சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி; 55 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு தடகள போட்டி
    பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்வு; காரணம் என்ன? பாராலிம்பிக்ஸ்
    இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025