தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டிற்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு திமுக இளைஞரணி தொடங்கப்பட்டவுடன் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. அதற்கு பிறகு, தற்போது சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியுள்ளது. சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே இந்த மாநாட்டுக்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலத்திற்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டை திமுக எம்பி கனிமொழி, கட்சி கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.