NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு 
    இந்த மசோதா குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடந்தது.

    'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 20, 2023
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரைவு மற்றும் தாக்கல் செய்வது குறித்து திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் பேசினார்.

    மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும், நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்ற மசோதாவை நேற்று அரசு அறிமுகப்படுத்தியது.

    இந்த மசோதா குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடந்து வருகிறது.

    அந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்படுவதை ஏன் அரசாங்கம் ரகசியமாக வைத்திருந்தது என்று கேள்வி எழுப்பினார்.

    27 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி பிற கட்சிகளிடம் ஆலோசனை நடத்தியதா என்று கேள்வி எழுப்பிய கழிமொழி தன் உரையை தொடங்கினார்.

    டக்வ்ஜ்ஹ

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து எம்பி கனிமொழி இன்று பேசியதாவது:

    "நானே இந்தப் பிரச்சினையை(மகளிர் மசோதா) நாடாளுமன்றத்தில் பலமுறை எழுப்பி இருக்கிறேன். ஆனால், அரசின் பதில் ஒரே மாதிரியாக தான் இருந்தது.

    'அனைத்து அரசியல் கட்சிகளையும் ஈடுபடுத்தி, மசோதாவை கொண்டு வருவதற்கு முன் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.' என்று அவர்கள் கூறி வந்தனர்.

    இப்போது என்ன ஒருமித்த கருத்து உருவானது? என்ன விவாதங்கள் நடத்தப்பட்டன என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

    இந்த மசோதா ரகசியமாக கொண்டு வரப்பட்டிருக்கிறது.

    இந்த சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்பட்டது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை.

    அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    அரசியல் தலைவர்கள் யாரையும் விவாதத்திற்கு அழைத்தார்களா என்று தெரியவில்லை.

    திடீரென்று எங்கள் கணினிகளில் இந்த பில்(மசோதா) 'பாப் அப்' ஆகிறது."

    ட்ஜகிவ்கொண்ட

    இந்தியில் கிசுகிசுத்தவருக்கு தமிழில் பதிலடி கொடுத்த கனிமொழி 

    "இந்த அரசாங்கம் இப்படித்தான் செயல்படப் போகிறதா?" என்று மேலும் கேள்வி எழுப்பிய அவர், நாடாளுமன்ற அதிகாரிகளின் சீருடைகள் திடீரென்று மாற்றப்பட்டதை சுட்டிகாட்டி பேசினார்.

    "நாடாளுமன்ற ஊழியர்களின் சீருடையில் இருந்து திடீரென்று தாமரைகள் மலர்வதை நாங்கள் பார்க்கிறோம். இப்படி எல்லாமே திடீரென்று தான்நடக்க போகிறதா?" என்று அவர் பாஜகவை சாடினார்.

    பொதுவாக, கனிமொழி அவையில் பேசும்போது யாரவது இந்தியில் கிசுகிசுத்தால் அவர் தமிழில் பதிலடி கொடுப்பார்.

    அதேபோல இன்றும் ஒரு நிகழ்வு நடந்தது.

    அவர் பேசி கொண்டிருக்கும் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதோ ஒன்றை இந்தியில் சொல்ல, அதற்கு பதிலளித்த கனிமொழி, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியாதபோது நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?" என்று தமிழில் பதிலடி கொடுத்தார்.

    ஐஜியூன்ல்

    பெண்களுக்கான சம உரிமை குறித்து கனிமொழி பேசியதாவது:

    "மேலும், இந்த மசோதா நிறைவேறும் என்று காத்திருக்கும் என் கோடிக்கணக்கான சகோதரிகள் இன்னும் இதற்காக காத்திருக்க வேண்டும் என்று சொன்னவுடன் என் இதயம் கனத்தது. இந்த மசோதா எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவில்லை.

    இந்த மசோதா 'நாரி சக்தி வந்தான் மசோதா' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு வணங்குவதை முதலில் நிறுத்துங்கள்!

    எங்களுக்கு வணக்கம்... கும்பிடு போடுவதை நிறுத்துங்கள். அம்மா, சகோதரி அல்லது மனைவி என்று அழைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

    நாங்கள் சமமாக மதிக்கப்பட விரும்புகிறோம். உங்களுடன் இறங்கி சமமாக நடக்க விரும்புகிறோம்.

    இந்த நாட்டின் மீது எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. இந்த நாடாளுமன்றமும் எங்களுக்குச் சொந்தமானது."

    ட்விட்டர் அஞ்சல்

    கனிமொழி பேசுவதற்கு முன் அவையில் நடந்த சலசலப்பு 

    #JUSTIN நீங்க என்ன பேசுனாலும் புரியாது - மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது கனிமொழி எம்.பி. பேசுவதற்கு முன் அவையில் சலசலப்பு#kanimozhi #DMK #ParliamentSpecialSession #WomensReservationBill #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/tjcix4CFfA

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) September 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    மக்களவை
    கனிமொழி
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்

    திமுக

    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி கர்நாடகா
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் மு.க ஸ்டாலின்
    அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்  அதிமுக
    48 மணிநேரம் கெடு விதித்து, திமுகவிற்கு நேரடியாக சவால் விட்ட H.ராஜா பாஜக

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கோவை

    நாடாளுமன்றம்

    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது  மக்களவை
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    வீல் சேரில் வந்து ராஜ்யசபாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்: காங்கிரஸை சாடும் பாஜக  மாநிலங்களவை
    'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025