NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம் 
    செப்டம்பர் 18-ம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்க இருக்கிறது.

    நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 13, 2023
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது.

    இந்த கட்டிடம் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிக்கும் கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சீருடையும் இந்திய பாணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அடுத்த வாரம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்து நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க இருக்கும் நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 18-ம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்க இருக்கிறது.

    சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் நடைபெறும்.

    அதற்கு அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 19-ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒரு சிறிய 'பூஜை'க்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்படி நுழைவார்கள்.

    டின்வ்ஜ்ல்

    நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையை வடிவமைத்த NIFT

    நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியை(NIFT) சேர்ந்த நிபுணர்கள் நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையை வடிவமைத்துள்ளனர்.

    இதற்கு முன், நாடாளுமன்ற ஊழியர்கள் அணிந்து கொண்டிருந்த 'பந்த்கலா' சட்டைகளுக்கு பதிலாக அவர்களுக்கு வாடாமல்லி நிற/இளஞ்சிவப்பு நிற நேரு ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.

    அவர்களது சட்டைகள் தாமரை மலர் வடிவமைப்புடன் அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    மேலும், அவர்களது பேன்ட்டுகள் காக்கி நிறத்தில் இருக்கும்.

    இரு அவைகளிலும் உள்ள மார்ஷல் அதிகாரிகளின் உடையும் மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிய உள்ளார்கள்.

    நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் உடையும் மாற்றப்பட இருக்கிறது. சஃபாரி உடைகளுக்குப் பதிலாக, அவர்களுக்கு இராணுவ உடைகளை போன்ற உருமறைப்பு ஆடைகள் வழங்கப்பட உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    புதிய நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    நாடாளுமன்றம்

    அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு  அதிமுக
    தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் - எம்.பி., டி.ஆர்.பாலு  திமுக
    விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் டெல்லி
    "மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி பிரதமர் மோடி

    புதிய நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025