Page Loader
பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2024
06:43 am

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த முறை வியாழக்கிழமை வரவுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மக்களின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எம்டிசி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

எம்டிசி எக்ஸ் பதிவு