NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

    விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 10, 2024
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவை எதிர்த்து ஒரு முஸ்லீம் கணவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதை தள்ளுபடி செய்தது.

    மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்தியா 

    'ஜீவனாம்சம் என்பது திருமணமான பெண்களின் உரிமை'

    "பிரிவு 125, திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்ற முக்கிய முடிவோடு குற்றவியல் மேல்முறையீட்டை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்" என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.

    நீதிபதி நாகரத்னா, நீதிபதி மாசி ஆகியோர் தனித்தனியாக, ஆனால் ஒரே நேரத்தில் தீர்ப்புகளை வழங்கினர்.

    ஜீவனாம்சம் கோரும் சட்டம், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது.

    ஜீவனாம்சம் என்பது திருமணமான பெண்களின் உரிமை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    "இல்லத்தரசியாக இருக்கும் மனைவி, உணர்ச்சி ரீதியாகவும் பிற வழிகளிலும் உங்களை சார்ந்திருக்கிறார்கள் என்பதை சில கணவர்கள் உணரவில்லை. இந்திய ஆண் ஒரு இல்லத்தரசியின் பங்கையும் தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்று நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    உச்ச நீதிமன்றம்

    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது தேர்தல் பத்திரங்கள்
    'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  எஸ்பிஐ
    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்  பதஞ்சலி
    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு  மத்திய அரசு

    இந்தியா

    இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் நீட் தேர்வு
    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார் மக்களவை
    உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி உத்தரப்பிரதேசம்
    சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025