NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது
    திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது

    திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2023
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதியில் பக்தர்கள் வரும் ஜனவரி.1ம்.,தேதிவரை சொர்க்கவாசல் வழியே அனுமதிக்கப்படவுள்ளனர்.

    இதற்கான இலவச தரிசனத்திற்கு நாள்ஒன்றுக்கு 43 ஆயிரம் டோக்கன்கள் என்னும் வீதம் 10 நாட்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச சர்வத்தரிசன டோக்கன்கள் கடந்த 22ம்.,தேதி மதியம் 2 மணிமுதல் விநியோகிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் முன்னதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.

    இந்த இலவச டோக்கன்களை பெறுவதற்காக தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் 21ம்.,தேதியே குவியத்துவங்கியது.

    கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பியதால் 21ம்.,தேதி நள்ளிரவு முதலே டிக்கெட் விநியோகம் துவங்கியது.

    25ம்.,தேதி வரையிலான டிக்கெட்கள் மொத்தமும் 22ம்.,தேதியே தீர்ந்துள்ளது.

    இதனிடையே தரிசன டிக்கெட்டுகள் இன்றி எக்காரணம் கொண்டும் பக்தர்கள் சாமித்தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்தது.

    திருப்பதி 

    ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தர வேண்டாம்

    அதேசமயம், தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,

    கோயில் வெளிப்புறம் கோபுர தரிசனம், வராக சாமி உள்ளிட்ட இதர சன்னதிகளை தரிசனம் செய்யவும், மொட்டையடிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் தற்போது, திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் டோக்கன் விநியோகம் முடிவுற்றது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக வரும் ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தர வேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

    தொடர்ந்து, ஸ்ரீவாரி தரிசனம் செய்ய இயலாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா

    சமீபத்திய

    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல் உலக வங்கி
    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஆன்லைன் கேமிங்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    ஆந்திரா

    திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை  திருப்பதி
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  காவல்துறை
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  அமலாக்க இயக்குநரகம்
    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025