NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் 
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் 

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையினை மேற்கொண்டனர்.

    அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79கோடி சொத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர் என்று கூறப்படுகிறது.

    விசாரணை 

    29ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

    அதன்படி, விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி 216 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையினை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் உள்ளிட்டோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் தற்போது சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வரும் 29ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனிடையே கடந்த 5ம் தேதி விஜயபாஸ்கர் இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் அவரை ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அதிமுக

    கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு ஓ.பன்னீர் செல்வம்
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி எடப்பாடி கே பழனிசாமி
    திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை  ஓ.பன்னீர் செல்வம்

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025