NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது 
    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) உடன் இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது 

    எழுதியவர் Sindhuja SM
    May 17, 2023
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பனஸியா பயோடெக்கின் டெங்கு தடுப்பூசிக்கான 3வது கட்ட சோதனை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) உடன் இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

    மருந்துகள் மற்றும் மருந்து போலிகளை வைத்து மேற்கொள்ளப்படும் 3வது கட்ட சோதனையானது குருட்டு தனமாக நடத்தப்பட இருக்கிறது.

    அதாவது, உண்மையான மருந்துகள் யாருக்கு போடப்படுகிறது, மருந்து போலிகள் யாருக்கு போடப்படுகிறது என்பது மருத்துவர்களுக்கும் தெரியாது, மருந்தை எடுத்துக் கொள்பவர்களுக்கும் தெரியாது.

    "ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறுவனம் தயாராகிவிடும். எனவே, 3வது கட்ட சோதனைகள் சில மாதங்களில் தொடங்கப்படும்." என்று ICMRஇன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்துள்ளார்.

    details

    1 மற்றும் 2வது கட்ட சோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது 

    டெங்கு காய்ச்சலைத் தடுப்பதில் தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதே இந்த சோதனையின் முதன்மை நோக்கமாகும்.

    மேலும், இந்த சோதனை தடுப்பூசியின் பாதுகாப்பை ஆராயும்.

    1 மற்றும் 2வது கட்ட சோதனைகள் இந்தியாவில் உள்ள ஆரோக்கியமான நபர்களிடம் நடத்தப்பட்டது என்று ICMR இன் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா கூறியுள்ளார்.

    3வது கட்ட சோதனையில், 18-80 வயதுடைய 10,335 ஆரோக்கியமான நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த சோதனை 20 தளங்களில் நடத்தப்படும் என்றும் டாக்டர் நிவேதிதா குப்தா தெரிவித்துள்ளார்.

    டெங்கு என்பது கொசுக்களால் பரவும் நோயாகும். இது நான்கு வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுகிறது.

    இந்தியாவின் பல பகுதிகளில் இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக இருந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெங்கு காய்ச்சல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025