NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு 
    டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும் - பொது சுகாதாரத்துறை

    டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Oct 09, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மும்முரமாக எடுத்து வருகிறது.

    இதனிடையே, அக்டோபர்.,5ம் தேதி முதல் 12ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

    அதன் ஓர் அங்கமாக, நேற்று(அக்.,8)சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தகவலறியும் உரிமை சட்ட விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சி பொது சுகாதாரத் துறை இயக்குனரான செல்வவிநாயகம் தலைமையில் நடந்தது.

    இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வவிநாயகம்,"மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டெங்கு பாதிப்பினை கண்டறிய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

    டெங்கு 

    ஒவ்வொரு நாளும் 40 பேர் டெங்குவால் பாதிக்கப்படுவதாக தகவல் 

    மேலும் அவர், டெங்கு பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 6 மணி நேரத்தில் முடிவுகளை வழங்க பொது சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 3 மாதங்கள் டெங்கு பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளது.

    மழைக்காலம் துவங்கும் போதே, கொசுக்கள் காரணமாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய் பரவல் மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

    இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 40 பேர் மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்.

    அதன்படி, இந்த டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுகாதாரத் துறை
    தமிழக அரசு
    டெங்கு காய்ச்சல்
    மலேரியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு

    தமிழக அரசு

    நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை திருநெல்வேலி
    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தமிழக அரசு  மு.க ஸ்டாலின்
    திடீரென முடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் தமிழ்நாடு

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  கேரளா

    மலேரியா

    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உலக சுகாதார நிறுவனம்
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மருத்துவ ஆராய்ச்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025