NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்
    டெல்டா மாவட்டம் - முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த விவசாயிகள்

    முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்

    எழுதியவர் Nivetha P
    Oct 06, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்த அறிக்கையில் அவர், கடந்த ஜூன்.,12ம்தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி விவசாயத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாமல் பிரச்சனை செய்து வருவதால், விவசாயத்திற்கு போதிய நீரினை திறந்துவிட இயலவில்லை.

    இதனால் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்ட நெற்பயிர்கள் வாடிப்போனது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டருக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்க உத்தரவு விடுவதாக தெரிவித்திருந்தார்.

    ஆனால், முதல்வர் அறிவித்துள்ள இழப்பீடுத்தொகை ஏமாற்றம் தருவதாக டெல்டா விவசாயிகள் கூறியுள்ளனர்.

    இழப்பீடு 

    இழப்பீடு தொகையை ரூ.35,000மாக கொடுக்க வலியுறுத்தல் 

    இதுகுறித்து டெல்டா விவசாயிகள் சங்கத்தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் கூறுகையில், "தமிழக அரசின் வாக்குறுதியினை நம்பி, டெல்டா மாவட்டங்களில் பயிரிட்ட நிலையில், தற்போது பயிர்கள் அனைத்தும் கருகி போயுள்ளன".

    "ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக கேட்ட நிலையில், ஹெக்டருக்கு ரூ.13,500 என்பது ஏமாற்றமளிக்கிறது. இத்தொகையை, அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கொடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இவரைத்தொடர்ந்து, காவிரி உரிமை செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட்டோர், அரசு இழப்பீட்டுத்தொகையினை ஏக்கருக்கு ரூ.35,000மாக உயர்த்தி கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    மேலும் குறுவை சாகுபடிக்கு தற்போதுவரை காப்பீடு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவிரி
    மு.க ஸ்டாலின்
    தமிழக அரசு
    விவசாயிகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  சினிமா
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு சித்தராமையா

    மு.க ஸ்டாலின்

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் தமிழ்நாடு
    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை கருணாநிதி
    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  தமிழ்நாடு
    தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு

    தமிழக அரசு

    அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை  பெங்களூர்
    ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சென்னை
    பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது தமிழ்நாடு
    நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை திருநெல்வேலி

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025