NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 
    இந்த வழக்குக்கு தற்போது "மிஷன் மலாமல்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 64 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்று அவர்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தற்காக இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த கொலைகளைச் செய்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.

    குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன் (28) மற்றும் அங்கித் குமார் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ராஜ்ராணி மற்றும் அவரது மகள் ஜின்னி கிராரின் உடல்கள் மே 31 அன்று கிருஷ்ணா நகரில் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த வழக்குக்கு தற்போது "மிஷன் மலாமல்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    details

    கொலை செய்வதற்கு முன் சட்ட ஆலோசனை பெற்ற கொலையாளிகள் 

    கொலை செய்வதற்கு முன் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    ஏதோ ஒரு வெப் சீரிஸை பார்த்துவிட்டு போலீஸார் எப்படி செயல்படுவார்கள் என்று அவர்கள் தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    புதன்கிழமை, கிருஷ்ணா நகரின் E பிளாக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஒரு நபர் இரவு 7.56 மணிக்கு போலீஸாருக்கு அழைப்பு விடுத்தார்.

    அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

    அங்கு சூறையாடப்பட்ட வீட்டிற்குள் ராஜ்ராணி மற்றும் கிராரின் உடல்கள் கிடந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் இந்தியா
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியா

    இந்தியா

    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் காவல்துறை
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  ரிசர்வ் வங்கி
    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  விளையாட்டு வீரர்கள்
    மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம்  டெல்லி

    காவல்துறை

    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா

    காவல்துறை

    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025