NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு
    2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்

    2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 18, 2024
    05:55 pm

    செய்தி முன்னோட்டம்

    பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இரண்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயின், பணமோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறி, 2022 மே 30 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.

    சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ​விசாரணை செயல்முறையில் நீடித்த தாமதம் மற்றும் விசாரணை தொடங்க அல்லது முடிவடைய அதிக நேரம் எடுப்பதை குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார்.

    ₹50,000 பத்திரத்தில் இரண்டு ஜாமீன்களுடன் சத்யேந்திர் ஜெயினுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    முன்னதாக, அவர் மீது 2017இல் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    வரவேற்பு

    ஜாமீனுக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் வரவேற்பு

    இந்தச் செய்திக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவரது நீட்டிக்கப்பட்ட சிறைத்தண்டனை நியாயமற்றது என்றும் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு உண்மையையும் நீதியையும் நிலைநிறுத்திய நீதித்துறையை மணீஷ் சிசோடியா பாராட்டினார்.

    சமீபத்தில் பல்வேறு வழக்குகளில் மூத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாதம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மதுபான ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    இதேபோல், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கும் கலால் கொள்கை வழக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆம் ஆத்மி
    டெல்லி
    அமலாக்க இயக்குநரகம்
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்
    இந்தக் காரணங்களுக்காக தான் அமெரிக்கா இந்தியர்களுக்கு மாணவர் விசாக்களை மறுக்கிறதாம்! அமெரிக்கா
    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை

    ஆம் ஆத்மி

    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்  டெல்லி
    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி அரவிந்த் கெஜ்ரிவால்
    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது? அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி

    டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஹரியானா
    சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு தள்ளப்படலாம்: ஆம் ஆத்மி  அரவிந்த் கெஜ்ரிவால்
    'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கடத்தல்
    225 பயணிகளுடன் ரஷ்யாவிற்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்; தற்போதைய நிலை என்ன? ஏர் இந்தியா

    அமலாக்க இயக்குநரகம்

    மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை சத்தீஸ்கர்
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் இந்தியா
    ₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் திருச்சி
    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்

    அமலாக்கத்துறை

    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை செந்தில் பாலாஜி
    சென்னை நகை கடைகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை  சென்னை
    அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக பைஜூஸூக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை? வணிகம்
    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025